நிமிர்ந்த நடை நடந்து
நிற்காமல் உழைத்திடுவான்,
நாமறிந்த செய்திகள் - இவன்
செவி சென்று வந்தவையே,
கடமையைக் கருத்தாகச்
செய்திடுவான் - பிணியைக்
கண் விழித்து விரட்டிடுவான்!
நிற்காமல் உழைத்திடுவான்,
நாமறிந்த செய்திகள் - இவன்
செவி சென்று வந்தவையே,
கடமையைக் கருத்தாகச்
செய்திடுவான் - பிணியைக்
கண் விழித்து விரட்டிடுவான்!
அவதிப் படுவோரின்
ஆபத்பாந்தவன்,
சேகுவாராவின் சகோதரன்,
பெரியாரின் பேரன்,
பகுத்தறிவைப் பேசிவிட்டுப்
பசப்புகளை உடைத்திடுவான்,
சிகிச்சையென்று வந்துவிட்டால்
சிரத்தையோடு செய்திடுவான்,
சமூக நீதியின் சத்தம் - அவன்
சபை எங்கும் ஒலித்திருக்கும் - ஆம்
அறுவை சிகிச்சையில் - அவனுக்கு
அனைவரும் சமமே!
அவன் முகம் கண்டவுடன்
கவலைகள் கலைந்தோடும்,
உறுதியான கை பட்டு - உன்
உள்ளுறுப்பு உறுதி பெறும்,
ஆரோக்கியம் மட்டுமல்ல
அறமும் பழகிடுவான்,
மருத்துவத்தால் மட்டுமல்ல
மதியாலும் விதி செய்வான்!
நரிகள் ஆடும் ஆட்டம் - அவன்
நாடியிலே ஒட்டவில்லை,
கோடிட்டு வாழ்பவன்
கோடிகளுக்கு ஆசையில்லை - அவன்
அன்புக்கு அளவுண்டு - ஆனால்
அக்கறைக்கு அளவே இல்லை,
பிணியோடு வந்தோரின்
பிறவிதனைப் பேணிக் காக்கப்
பிறப்பெடுத்து வந்த சாமி,
எங்கள்
கந்தசாமி!