Monday, May 5, 2025

இசை

அழவைக்கும் அழகூட்டும்,
உணர்வூட்டும் உயிரூட்டும் 
உச்சி முகர்ந்து 
உறங்க வைக்கும்,
உறங்காமல் 
விழிக்க வைக்கும்,
கலங்கடிக்கும்
கட்டியும் அணைக்கும்,
காலத்தைச் சுருக்கிவிட்டுக் 
கடந்தவற்றை நினைவூட்டும்,
நினைவுகளை நீட்டிவிட்டு
நீண்ட தூரம் கூட வரும்,
சுருக்கமாகச் சுகமளித்து
சுதந்திரத்தின் அடிமையாக்கும்,
மண் வாசனையில் 
மயங்க வைக்கும்,
மதியை மறக்கடிக்கும்,
கள்ளுண்ணாமலே  
போதை தரும்,
கலவியின்றி 
உச்சமும்  தரும்,
காதலையோ கொண்டாடும் - ஆனால்
காற்றின் வழி வந்து 
காலத்திற்கும் கூட வந்து 
உயிரினிலே கலந்தாலும்
புரிவதேயில்லை... 
இசை!

No comments: