Sunday, May 4, 2025

பிரிவு

விடுமுறையில் 
நீ தாய் வீட்டில்,
விடுதலையில் 
நான் தனிக் கூட்டில்,
சீரில்லா  இத்தனிமை 
சிறப்புதான்  என்றாலும் 
சீமாட்டி நீ இல்லாமல் 
சிகரம் தொட்டு 
என்ன பயன் - என 
தாய் வீடு 
சென்றிருந்த - நீலத்தை
நினைத்து நினைத்து  
நிர்க்கதியாய்  நின்றிருந்த 
நிலவிடமே கேட்டுவிட்டேன் - ஆனால்
தொலை தூரம் - நீ 
சென்றாலும் 
தொலையாத 
உன் நினைவை - என் 
வீடெங்கும் ஒலித்திருக்கும்  
உன்  கொலுசொலி 
சொல்லியது, 
"இந்தத் 
தற்காலிகப் 
பிரிவு கூட - ஒரு
தரமான 
காதல் தான்!
"

No comments: