Saturday, February 22, 2025

கூடல்


அதன் பின் 
யோசித்தேன்,
நீ இல்லையெனில் 
என்னாவேன் என்றெண்ணி - என்
உக்கிரத்தை உதறிவிட்டு 
உன்னிடமே ஓடி வந்தேன் - உன்
மனதளவில் எனை 
மன்னிக்கும் முன் 
கொஞ்சம் கட்டிக்கொள்,
நீ மன்னிப்பது - என் 
மனதுக்குக் கேட்க 
வேண்டுமல்லவா - இப்போதைக்கு
முத்தமெல்லாம்  வேண்டாம்,
இறுகக் கட்டிக்கொள் போதும்,
கொஞ்சம் மூச்சுத் திணறும்
விலகி விடாதே - பிடியை 
விட்டு விடாதே,
முடிந்தால் 
இன்னும் இறுக்கிக் கட்டு - உன் 
அன்பின் அரவணைப்பில்  - என் 
ஆணவங்கள் அழியட்டும்,
விலா எலும்புடன் சேர்ந்து
என் வினையெல்லாம் 
நொறுங்கட்டும் !