அன்பால் அழுத்தியும்
அடங்கவில்லை,
தன்மையாத் தடவியும்
தணியவில்லை,
நல்லெண்ணத்துடன் துளி
எண்ணெய் வார்த்துருவியும்
பயனில்லை - வெகு
சிரத்தையுடன் சிறு
கயிறு கட்டியும்
கட்டுக்குளில்லை - பாசத்துடன்
பசை தடவியும்
பலனில்லை - பாழும்
பாசாங்கும் பலிக்கவில்லை,
உபதேசம் உரைக்கவில்லை,
அகந்தை அழியவில்லை,
அகங்காரத்திற்களவில்லை - பின்னொருநாள்
அறம் கொண்டக் கத்தரியது
வெகுண்டெழுந்து வெட்டியதில்
வழியின்றி வீழ்ந்தது - அந்தச்
சுருட்டைக் குணம் கொண்ட
வணங்காமுடி!
குறிப்பு: இது என் சுருட்டை முடி அனுபவங்கள், சில மனிதர்களுக்கும் பொருந்தும்.

தன்மையாத் தடவியும்
தணியவில்லை,
நல்லெண்ணத்துடன் துளி
எண்ணெய் வார்த்துருவியும்
பயனில்லை - வெகு
சிரத்தையுடன் சிறு
கயிறு கட்டியும்
கட்டுக்குளில்லை - பாசத்துடன்
பசை தடவியும்
பலனில்லை - பாழும்
பாசாங்கும் பலிக்கவில்லை,
உபதேசம் உரைக்கவில்லை,
அகந்தை அழியவில்லை,
அகங்காரத்திற்களவில்லை - பின்னொருநாள்
அறம் கொண்டக் கத்தரியது
வெகுண்டெழுந்து வெட்டியதில்
வழியின்றி வீழ்ந்தது - அந்தச்
சுருட்டைக் குணம் கொண்ட
வணங்காமுடி!
குறிப்பு: இது என் சுருட்டை முடி அனுபவங்கள், சில மனிதர்களுக்கும் பொருந்தும்.
No comments:
Post a Comment