Sunday, March 7, 2021

வேட்பாளன்

வானிருந்து வந்திடுவான் 
வாசலிலே தவமிருப்பான்,
தயங்கித்தான் நின்றுவிட்டால் 
தாழ்பணிந்து  வணங்கிடுவான்,
தன்மானம் விற்று வைத்தக் 
கூட்டணியைப்  போற்றிடுவான் - உன்
கட்டளைகள் ஏற்று அதைக் 
கடமையெனச் செய்திடுவான்,
யாதும் நீயென்பான்
யாவரும்தான் கேளிரென்பான்,
உத்தமனாய் வேடமிட்டு 
உன்னுரிமை திருடிவிட்டு - உன் 
எதிர்காலம் தொலைத்திருப்பான்,
வெகுளித்தனம் மாறாமல் - நீயும்
வெள்ளந்தியாய்ச்  சிரித்திருப்பாய்!

No comments: