Sunday, May 21, 2017

மூணாறு

சித்திரை வெயிலின்
கடுஞ்சினம் அஞ்சி - குளிரும் இரவும்
பயந்தலறிய இருளில் - கதிரவனை மாய்க்கக்
கிழக்கைத் துரத்தினோம்!

ஒளியின் ஒற்றர்களிடம்
சமரிட்டுக் களைத்து - வேழமுகன்
பிளிறலில் நிலை
மறந்து எழுந்தோம் - பின்னவன்
ஆசியுடன் ஆண்டை  நாட்டு
எல்லை நுழைந்தோம்!

கள்வெறி கொள்ளத்
தேரோட்டி அலைந்தோம் - கொண்டபின்
இயற்கையை
உறவுக்கு அழைத்தோம்!

இலக்கம் பாராமல்
லக்கத்தில் திளைத்தோம் - மலை
முகட்டில் மீனென
நீந்திக் குளித்தோம்!

இயற்கையோடு  உறவாட
போதை அணிந்தோம் -  போதை
நிலைத்தாட
போதனை களைந்தோம்!

விரிந்தாடும் நீருடன்
காதல் கொண்டோம் -
 விழுந்தோடும்
அருவியின் தனிமை
சேமித்த நிழல்
தவிர்த்தோம் - அவ்வெற்றியை
கொண்டாட மலையேறிக் கொக்கரித்தோம்!

பெரிதாய் விழுந்தோம் - சிறிதே
காயமுற்றோம் - மீண்டெழுந்து
காயத்தின் பெருமையைச்
சுவைத்தோம் - பசி
கொண்ட அட்டைகளுக்குத்
தானமும் அளித்தோம்!

உயிர் கொன்றோம்
சிவனானோம் - அதை
உணவாய்ப் படைத்து
பிரம்மனும் ஆனோம்!

வெட்டியாய்ப் பேசினோம் - விவரங்கள்
அறிந்தோம் - விளக்குகள்
அணைந்தும்
மின்மினியால் ஒளிர்ந்தோம்!

கிரீச்சிடும் மரங்கள்,
பெரும்பறவைகளின் பேச்சு,
குறும்பூச்சிகளின் கீச்சு,
அருகாமை அருவியின் கூச்சல்,
குளிர் காற்றின் ஊடல் - இப்பேரமைதியில்
உரக்கவே உறங்கினோம்!

படைத்து வாழ்வளித்த
இயற்கையைப் புகழ்ந்தோம் - செயற்கையைப்
போற்றும் பக்தர்களை இகழ்ந்தோம் - கனவோடு
குளிர் கொஞ்சம்
நெஞ்சுக்குள் அடைத்தோம் - கதிர்
கருக்கும்  நிலமதனை
விரும்பாமல் அடைந்தோம்!

நிஜத்தைச் செலவழித்து
நிழலைச் சேமித்தோம் - மலை
மேக ஊடலைக்
கண்டு  ரசித்துக் கற்று -உடல்
மட்டும் கொண்டு
மனதை விட்டு வந்தோம்!


குறிப்பு: இப்பதிவு நண்பர்களுடனான மூணாறு சுற்றுலாவின் பாதிப்பு.

10 comments:

Unknown said...

ji antha Coimbatore to malumichampatti drive ah maranthutinga

Karikalan said...

மனசோடு இருக்கு நண்பா!
உன்னை செயல்ல பழி வாங்கிக்கறோம்,
அதனால் தான் சொல்லாய் எழுதவில்லை! :-)

Gobinath Mani said...

தெய்வமே நீங்க எங்கயோ போயிட்டீங்க... அருமை ☺

Unknown said...

Arumai anna, aruma.enna Balcony pathi thaan sollave illa

Unknown said...

ஆ..ஆ

Karikalan said...

@Shanmugam mama: neenga nallavara, kettavara?

@Tamil: Ithu vera Munnar sister.

@Gobi: Engayum pogala boss, Munnar thaan ponen, unga kooda thaan :-).

Unknown said...

அருமை

Unknown said...

அருமை

Unknown said...

You're great bro..

Dhinesh said...

super anubhavam