வெள்ளமெனப் பாய்ந்துவிட்டு
வெள்ளந்தியாய்ச் சிரிக்கின்றாய்,
வேரறுக்கும் புயலாகி
வெண்சாமரம் வீசுகின்றாய்,
கொஞ்சிக் கொஞ்சிப் பேசும்போதே
கோபக்கனல் வீசுகின்றாய்,
சமாதானமாகி விட்டுச்
சண்டைக்கு நிற்கின்றாய்,
உயிருக்குள் ஊடுருவி - பெண்
உள்ளத்தை அளக்கும் கலை
கடவுளுக்கு வசப்படலாம்,
கரிகாலனுக்கு இல்லையடி!