Tuesday, February 18, 2020

கலங்கரை விளக்கம்

இன்றல்ல நேற்றல்ல
வருடங்கள் கணக்கல்ல,
தங்கத்தால் வந்ததல்ல
தழுவிக்கொண்டே நின்றதல்ல,
சூதுகளால் சுழன்றதல்ல
சூத்திரத்தால் பணிவதல்ல,
தர்க்கத்தின் தலையல்ல
தரத்திற்கு நிகரல்ல,
தவமாகிப்போன அது - உன்
அன்பன்றி வேறல்ல,
தவமிருந்து பெற்றோமே
தவமிருந்து பெற்றோமே,
தவமிருந்து பெற்றதனால்  - உன்
அன்பு வெறும் கடலல்ல
அது எங்கள்
கலங்கரை விளக்கம்!

குறிப்பு: வேலுமணி மாமாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

No comments: