Showing posts with label silambam. Show all posts
Showing posts with label silambam. Show all posts

Wednesday, March 22, 2017

குரு வாழ்த்து

ஐம்பதாம் மேடை கண்ட, பலப்பல திறமைகள் கொண்ட எங்கள் சிலம்பக்கலை குரு தொல்காப்பியன் அவர்களுக்கு சமர்ப்பணம்.

சிலம்பக்கலையின் உருவே, 
தொல்கலையின்  கருவே,
தொல்காப்பியனென்ற  குருவே!

முன் சுற்றில் முன்னேறி, 
பின் சுற்றில் நிலைமாறி!

இரண்டானடியில் நின்று மடங்கி,
உடானில் சட்டென்று நெருங்கி!

சறுக்கியில் சறுக்காமல்,
கிரிக்கியில் கிறங்காமல்!

பகலில் விட்டக்  குத்தில்,
தடையை விட்டுச் சுற்றில்!

தட்டி வந்து நீயடித்தப் பல்டி,
அடிப்  பிடி வரிசைக் கட்டி,
தலைச் சுற்றிச் சாதனைகள் கொட்டி,
இவ்வைம்பதாம் மேடையைத் தட்டி,
வெற்றியுனை அணைக்கும் கட்டி!


குறிப்பு: உடான், அடி பிடி குத்து வரிசை, இரண்டானடி, பல்டி, கிரிக்கி, சறுக்கி, முன் பின் சுற்று, பகல், தலைச்சுற்று, தட்டி வருதல் இவையனைத்தும் சிலம்பக்கலையின் நிலைப்பாடுகள்.